இலங்கை அணி தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பு! 

Thursday, April 19th, 2018

மாலைதீவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கனிஷ்ட மற்றும் பயிலுனர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட போட்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை சார்பில் 12வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் மகளிர் போட்டியாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தப் போட்டி ஓகஸ்ட் மாதம் மியன்மாரில் நடைபெறும் ஆசிய சம்பியன் போட்டிக்கான தகுதிகாண் போட்டியாககருதப்படும்.

Related posts: