இலங்கை அணி அபார வெற்றி
Tuesday, October 10th, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி , தனது முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பாக சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரட்ன 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் .அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 62 ஓட்டங்களையும் , தில்ருவன் பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அவ்வணி சார்பாக அஹார் அலி 59 ஓட்டங்களையும் , ஹரிஸ் சொஹாலி 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.
இந்நிலையில் , 317 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகி்ஸ்தான் அணி போட்டியின் இறுதி நாளான இன்று 248 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.இலங்கை அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சில் ஈடுபட்ட தில்ருவன் பெரேரா 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி , இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் போட்டித் தொடராட்ட நாயகன் விருது திமுத் கருணாரட்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|