இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு கிரிக்கட் போட்டி!

Tuesday, November 21st, 2017

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: