இருபதுக்கு 20 தொடரில் மீண்டும் மாலிங்க!

Friday, October 13th, 2017

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் மாலிங்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள இலங்கை கிரிக்கட் அணித் தேர்வுக் குழுவின் தலைவர் க்ரேம் லெப்ரோய் இதனைத் தெரிவித்துள்ளார்.

காயத்தினால் நீண்டகாலம் விளையாடாதிருந்த லசித் மலிங்கஇ இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் விளையாட ஆரம்பித்த போதும்இ சிறந்த பெறுபேற்றைப் பெறவில்லை.இந்தநிலையில் அவர் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இணைக்கப்படவில்லை.எனினும் அவரை 20க்கு20 கிரிக்கட் தொடரில் இணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக க்ரேம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பிலும்இ முழுமையான அணித் தேர்வுத் தொடர்பிலும் ஏனைய கிரிக்கட் வீரர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: