இரண்டாவது டி 20யில் இங்கிலாந்து வெற்றி!

Saturday, July 7th, 2018

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்து பீல்டிங் செய்ய இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்திய அணிக்கு தொடக்கமே சரிவாக அமைய ரோஹித் சர்மா 5, ஷிகர் தவன் 10, லோகேஷ் ராகுல் 6 என குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர். 4.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களுடன் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது. பின்னர் ரெய்னா 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 27 ரன்களையும், கோலி 47, தோனி 5 பவுண்டரியுடன் 32 ரன்களையும், ஹார்திக் பாண்டியா 12 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் வீரர்கள் ஜோசன் ராய் 15, ஜோஸ் பட்லர் 14, ஜோரூட் 9, இயான் மார்கன் 17, 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் ஹேல்ஸ் 58, வில்லி 3 ரன்கள் என எடுத்து 19.4 ஓவரில் வெற்றி இலக்கை தாண்டி 149 ரன்கள் எடுத்தனர்.
இதில் ஹேல்ஸ் மற்றும் வில்லி கடைசிவரை விக்கெட் இழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய – இங்கிலாந்து அணிகளின் வெற்றியை நிர்ணயிக்கப் போகும் மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Related posts: