இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்த பஹார் ஜமான்!

Tuesday, June 20th, 2017

பாகிஸ்தானின் மர்டான் மாவட்டத்தில் உள்ள கட்லாங் பகுதியை சேர்ந்தவர் பஹார் ஜமான். படிப்புக்காக கராச்சிக்கு வந்த இவர், பிறகு பாகிஸ்தான் கப்பல் படையில் வேலைக்கு சேர்ந்தார்.

சிறு வயதிலேயே கிரிக்கெட் ஆசை, எனினும் பெற்றோர்களால் அடக்கி வைக்கப்பட்டார். இருந்தாலும் விட்டுவிடுமா ஆசை? அவ்வப்போது கிரிக்கட் விளையாடி வந்த ஜமானின் திறமை, கப்பல் படை அணிக்கு தெரியவர, அந்த அணிக்கு ஆடினார்.அதன் பயிற்றுவிப்பாளர், ஆஷம் கான், உற்சாகப்படுத்தினார்.

உற்சாகம் அதிகரிக்க, வேலையை உதறினார். முழு நேர கிரிக்கெட்டுக்கு என்ன செய்யலாம் என, பாகிஸ்தானின் முன்னாள் தலைவர், யூனிஸ்கானிடம் ஆலோசனை கேட்டார் ஜமான். அவர், ‘உன் சொந்த ஊரிலேயே போய் விளையாடு’ என அறிவுரை கூற, அது பயன் தந்தது.உள்ளூர் மற்றும் பிராந்திய அளவிலான போட்டிகளில் கவனிக்கப்பட்டார். பிறகு பாகிஸ்தான் அணிக்குள் நுழைந்துவிட்டார்.கடந்த 7 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டிதான் ஜமானுக்கு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி.நேற்று எனக்கு உடம்பு சரியில்லை. சரியா ஆடுவேனான்னு சந்தேகம். இருந்தாலும் உள்மனசு ஏதோ சொல்லிட்டே இருந்தது. அதன்படி விளையாடினேன். ஒர்க் அவுட் ஆச்சு’ என்கிறார், பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாகி இருக்கும் ஜமான்.இந்நிலையில் நேற்று இடம்பெற்ற செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இவர் முதலவாது சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் 114 ஓட்டங்களை பஹார் ஜமான் பொற்று கொடுத்தார்

Related posts: