இந்தியாவுடன் களமிறங்குவது உறுதி – கெயில்!

Thursday, June 27th, 2019

கிரிக்கெட் உலகில் அதிரடி வீரர்கள் ஒருவராக திகழும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில், தனது ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் நாளை மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மேற்கிந்திய தீவுகள்-இந்தியா மோதவுள்ளது. இந்நிலையில், இன்று மேற்கிந்திய தீவுகள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது, தனது ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்த கெயில், உலகக் கோப்பைக்கு பின் இந்தியாவுடனான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் தான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக, கடந்த பிப்ரவரி மாதம் கெயில் அறிவித்திருந்தார் என்பது நினைவுக் கூரதக்கது.

உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அரையிறுதிக்கு முன்னேற குறைந்த வாய்ப்பே உள்ள நிலையில், எதிர்வரும் மூன்று போட்டிகளில் சதம் விளாசவும், வெற்றிப்பெறவும் முயற்சி செய்வோம் என கெயில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: