இதயம் கனக்கின்ற சுமையுடன் விடைபெற்ற டில்ஷான்!
Sunday, September 11th, 2016
சர்வதேச கிரிக்கெட் அரங்கின் தனது பிரியாவிடைப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் டில்ஸ்கூப் மன்னன் திலகரட்ண டில்ஷான் கனத்த இதயத்துடன் 17 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான திலகரட்ன டில்ஷானின் கடைசிப் போட்டி என்ப தால் இப்போட்டியைக் காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பியிருந்தனர்.
இலங்கை அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய போட்டியின் கதாநாயகனான டில்ஷானுக்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இரு பக்கமாக நின்று துடுப்பாட்ட மட்டையை மேலே உயர்த்தியவாறு மரியாதை அளித்தனர். இதில் டில்ஷான் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்று ஆட்டமிழந்தார். இதையடுத்து மைதானத் தில் நிரம்பியிருந்தவர்கள் எழுந்து நின்று கரகோஷத்தை எழுப்பி டில்ஷானுக்கு மரியாதை செலுத்தினர்.
இதன்போது டில்ஷான் அனைவருக்கும் தலை வணங்கினார். பின்னர் முழந்தாளிட்டு கரங்களை மேலே உயர்த்தி, மைதானத்தை முத்தமிட்டு ரசிகர் களுக்கு தனது அன்பு கலந்த மரியாதையை செலுத்தினார். இப்போட்டியில் பந்து வீச்சில் 2 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை ரசிகர்களை பரவசமடையச் செய்தார்.
இப்போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 17.5 ஓவர்களில் 130 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொ டரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை, அவுஸ்திரேலியா பங்குகொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. எனினும், அதன் பின்னர் நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரை 4 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இப்போட்டி நிறைவடைந்ததன் பின்னர் டில்ஷான், மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்க ளுக்கு கைலாகு கொடுத்து தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
பரிசளிப்பின் போது இலங்கை கிரிக்கெட்டுக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் டில்ஷானுக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதியன்று களுத்துறையில் பிறந்த திலகரட்ண டில்ஷான், சிறுவயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வமிக்கவராக விளங்கினார். களுத்துறை மத்திய வித்தியா லயத்தில் கல்வி பயின்ற அவர், பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, கழக மட்ட போட்டிகளில் விளையாட அழைப்புப் பெற்றார். அதன் பின்னர் இலங்கை ஏ குழாமில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பயனாக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட அவரு க்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி 1999ஆம் ஆண்டு ஸிம்பாப்வே அணி க்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு போன்ற சகல துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
அத்துடன் விக்கெட் காப்பிலும் ஈடுபட்ட இவர், கிரிக்கெட்டின் சகல துறைகளிலும் பங் கேற்று தனது பன்முகத் திறமையை கிரிக்கெட் உலகுக்கு வெளிக்காட்டியுள்ளார். இவ்வாறு தனது 17 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்புச் செய்து ள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 16 சதங் கள், 23 அரைச்சதங்கள் அடங்கலாக 5492 ஓட்டங்களை குவித்துள்ளார்.
மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 330 போட்டிகளில் பங்கேற்று 22 சதங்கள், 47 அரைச்சதங்கள் அடங்கலாக 10,290 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு உலக தரத்தில் 10 ஆயிரம் ஓட்டங்க ளைக் குவித்த 11ஆவது வீரராகவும் 4ஆவது இலங்கையராகவும் தனது பெயரை நிலைநாட்டினார்.
மேலும், சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 1889 ஓட்டங்களைக் குவித்து இவ்வகைப் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாமவர் என தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்
பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட திலக ரட்ண டில்ஷான், டெஸ்ட் அரங்கில் 39 விக்கெட் டுகளையும், ஒருநாள் அரங்கில் 106 விக்கெட்டுகளையும், இருபதுக்கு 20 அரங்கில் 9 விக்கெட்டுக ளையும் கைப்பற்றியுள்ளார் கிரிக்கெட் சாதனைகள் பல காணப்பட்டாலும், திலகரட்ண டில்ஷானுக்கு மாத்திரமே உரித்தான புதுமையான சாதனையை அவர் படைத்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை குவித்து, 100 விக்கெட்டுகளுக்கு (109) மேல் கைப்பற்றி 100இற்கு அதிகமான பிடிகளை (123) எடுத்து, விக்கெட் காப்பில் ஒரு ஸ்டம்பை புரிந்த கிரிக்கெட் வரலாற்றின் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்ஷான் மாத் திரமே என்பதாகும்.
Related posts:
|
|