ஆறுதல் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!

Friday, November 4th, 2016

 

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் ஆறுதல் வெற்றிகாக மூன்றாவது போட்டியில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானை முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் செய்தது. பின்னர் அந்த அணி 337 ஓட்டங்கள் குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணி நான்காம் நாள் ஆட்டத்தின்போது 208 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.பின்னர் 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் சிறிது தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் பின்னர் பிராத்வெயிட் 44 ஓட்டங்களும், டோரிச் 36 ஓட்டங்ளும் எடுக்க ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.

மேற்கிந்திய தீவுகள், 2007ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் நாட்டுக்கு வெளியே வங்கதேசத்தை தவிர்த்து வேறு எங்கும் நடந்த போட்டியில் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை இந்த வெற்றியின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: