அரை இறுதியில் குஸ்னெட்சோவா!
Friday, October 28th, 2016
சிங்கப்பூரில் நடந்து வரும் முதல் -08 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் குஸ்னெட்சோவா அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ரெட், வையிட் என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.‘வையிட்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா) 3–6, 6–2, 7–6 (6) என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்தார். இந்த ‘திரில்’ வெற்றியை பெற அவர் 2 மணி 17 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. 2-வது வெற்றியை பதிவு செய்த குஸ்னெட்சோவா அரைஇறுதியை உறுதி செய்திருக்கிறார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 7–6 (1), 6–3 என்ற நேர் செட்டில் கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த பிரெஞ்ச் பகிரங்க சம்பியனான முகுருஜா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார். கடைசி லீக்கில் ராட்வன்ஸ்கா- பிளிஸ்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இந்த பிரிவில் இருந்து 2-வது வீராங்கனையாக அரைஇறுதிக்கு முன்னேறுவார்.
Related posts:
|
|