அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் கம்பீர்!

Thursday, April 26th, 2018

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கவுதம் கம்பீர் விலகியுள்ளார்.இது குறித்த அறிவிப்பை கம்பீர் வெளியிட்டார். அதில், இது என்னுடைய முடிவு. நான் அணிக்கு போதுமான அளவு பங்களிப்பை கொடுக்கவில்லை.

அணித் தலைவர் என்ற நிலையில் பொறுப்பை நான் ஏற்க வேண்டியுள்ளது, தலைவர் பொறுப்பிலிருந்து இறங்க இது சரியான நேரம் என்பதை உணர்கிறேன் என கூறியுள்ளார்.இதையடுத்து டெல்லி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சீசனில் டெல்லி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: