அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கா பயணம்!
Sunday, December 11th, 2016
நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கைஅணி தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது.
தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள் மற்றும் 03 இருபதுக்கு இருபது போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியை வழியனுப்பும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த 12 பேர் கொண்ட இலங்கை குழாமில் பி.ஆர்.சீ விளையாட்டுக்கழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்சய பண்டாரவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத், உபுல் தரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதோடு, உபாதையில் இருந்து மீண்டு வந்த தினேஷ் சந்திமால் அணியின் உப தலைவராக செயற்படுகின்றார்.
இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்கவிற்குப் பதிலாக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


