130 வருடங்களுக்கு பிறகு திருப்பி கொடுக்கப்பட்ட புத்தகம்!

Monday, December 19th, 2016

தனது தாத்தா எடுத்து சென்ற புத்தகத்தை ஸ்டிபன் வூட்என்ற 72 வயது பேரன் திருப்பி கொடுத்த சம்பவம் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரிலுள்ள ஆர்மலி நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு புத்தகத்திற்காக விதிக்கப்பட்ட தண்டபண தொகையான சுமார் 20 இலட்சத்தையும்(10,679) பவுன்கள்) கட்டாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்மலி நூலுகம் மிகவும் பழமையான ஒரு நுலகமாகும். அங்கு ரஸ்மல் ஊட்டன் என்பவர் 1833 ஆம் ஆண்டு கிரேக்க வரலாற்றை கூறும் புத்தகம் ஒன்றை எடுத்து சென்றுள்ளார். நூலக விதிபடி புத்தகத்தை 14 நாட்களுக்குள் திருப்பி கொடுத்தல் வேண்டும் ஆனால் 14 நாட்கள் முடிவதற்குள் வூட்டன் இறந்துவிட்டாராம்.

இந்நிலையில் ஊட்டனின் மகள் மூலம் அவரது பேரனுக்கு அப்புத்தகம் கிடைக்கப்பெற்றுள்ளது. நீதிமன்ற உதவியாளராக இருந்த வூட் தற்போது ஓய்வு நிலை கொடுப்பனவுகளை பெற்றுவருபவர் என்பதால் அவரிடம் தண்டப்பணத்தை அறவிட முடியாது என்பதற்காகவும், புத்தகம் உரித்தான இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலுமேதான் அப் புத்தகத்தை திருப்பிக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வூட்டின் இச்செயலை பாராட்டிய ஆர்மலி நூலகத்தின் பொறுப்பாளர். தமது நூலகத்திற்கு சேரவேண்டிய புத்தகங்களைஏனையோரும் திருப்பி கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

Related posts: