மீண்டும் ஒரு அதிரடியில் வாட்ஸ்அப்!

Thursday, November 10th, 2016

வாட்ஸ்அப் சேவையானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தள சேவையாக இருக்கின்றது.

இச்சேவை தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்மறையான செய்திகள் வெளிவருகின்ற போதிலும் சிறந்த முறையில் சேவையினை வழங்கிவருகின்றது.இவ்வருடத்துடன் வாட்ஸ்அப் சேவை முடிவுக்கு வருகின்றது என வெளியாகிய செய்தியும் இவற்றுள் ஒன்றாகும்.

இப்படியிருக்கையில் கடந்த ஒரு சில மாதங்களாக வாட்ஸ்அப் ஆனது தனிநபர் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து வந்தது.

இவ்வாறு பகிரப்பட்ட தொலைபேசி இலக்கங்களைக் கொண்டு பேஸ்புக் நிறுவனம் தமது வலையமைப்பில் கணக்கினைக் கொண்டிராதவர்களை கணக்கினை ஆரம்பிக்கும் விதமாக தூண்டி வருகின்றது.இச்செயற்பாட்டிற்கு ஜேர்மனியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வாட்ஸ்அப் ஆனது தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்தியது.

இந்நிலையில் தற்போது ஐக்கிர இராச்சியத்திலுள்ள பயனர்களின் தகவல்களையும் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்வது நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பாடல் ஆணையாளரின் கட்டளையே காரணம் என தெரியவந்துள்ளது.

14600005

Related posts: