மருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு!

Thursday, June 2nd, 2016

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் புற்றுநோயை முற்றாக ஒழிப்பதற்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில், தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான தோல் புற்று நோய் தோல் பகுதியில் கருங்கட்டிகளாக உருவாகின்றன. அவற்றுக்கு ‘மெல னோமா’ என்று பெயர்.

இது 3 விதமாக வளர்ச்சி அடைகிறது. புற்று நோயை உருவாக்கும் ‘மெலனோமா’ தோலின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதியில் தாக்கி ‘மெலனேசைட்’ செல்களை அழிக்கின்றன. இவை தோலுக்கு நிறம் அளிக்கக் கூடிய மெலனினை உருவாக்கக் கூடியவை.

எனவே ‘மெலனோமா’ எனப்படும் புற்றுநோய் கருங்கட்டி ஏற்படுவதை தடுக்கும் வகையில் ‘எச்.ஏ.15’ என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது தோலின் மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை சென்று ‘மெலனோமா’ எனப்படும் தோல் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சி அடையாமல் தடுக்கிறது.

Related posts: