‘மம்மி’ யார் என கண்டுபிடித்தது எப்.பி.ஐ!

Tuesday, April 10th, 2018

எகிப்து நாட்டின் பிரமிடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட, மண்டை ஓடு யாருடையது என்பதை, அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.பல நுாறு ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்க நாடான எகிப்தில், இறந்தவர் உடலைப் பதப்படுத்தி, நிலவறையில் வைத்து, கல்லறை கட்டும் வழக்கம் இருந்தது.

பதப்படுத்தப்பட்ட உடல், ‘மம்மி’ என்றும், கல்லறை, ‘பிரமிடு’ என்றும் அழைக்கப்படுகின்றன.இந்நிலையில், எகிப்து நாட்டில், பிரமிடு ஒன்றில் இருந்து, 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு, 1915ல் கண்டுபிடிக்கப்பட்டது. அது யாருடையது என, தொல்லியல் நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தனர்.

ஆனால், கண்டு பிடிக்க முடியவில்லை.ஜெகுநாகி என்ற கவர்னருக்கு சொந்தமான பிரமிடில் இருந்து, அந்த மண்டை ஓடு எடுக்கப்பட்டதால், அவரது மனைவி அல்லது குடும்பத்தினரின் மண்டை ஓடாக இருக்கும் என்றும் கருதப்பட்டது; இருப்பினும் உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எப்.பி.ஐ., அந்த மண்டை ஓட்டை வாங்கி, ஆராய்ச்சி செய்தது. அதில் இருந்த பல் ஒன்றை வைத்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்; இந்த ஆய்வுக்கு, பல நவீன முறைகள் கையாளப்பட்டன.

முடிவில், ‘இது, கவர்னர் ஜெகுநாகியின் தலை தான்’ என, அறிவித்துள்ள, எப்.பி.ஐ., ஆராய்ச்சி மேலும் தொடரும்  என்றும் கூறியுள்ளது.

Related posts: