புற்றுநோயைக் கண்டறிய கருவி அறிமுகம்!

Friday, October 21st, 2016

அதிகரிக்கும் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதுமட்டுமின்றி புற்றுநோயை கண்டறியவும் இந்நோய்க்கான சிகிச்சைகளும் அதிகம் செலவை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் தொடர்பான சோதனைகளுக்கு பெரிய ஆராய்ச்சி கூடங்களையே மக்கள் நாட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில் தற்போது புற்றுநோயைக் கண்டறியும் சுலபமான வழி முறையை வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கருவியினை நம்முடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்து நம்மால் வீட்டிலேயே குறைந்த செலவில் புற்றுநோயை கண்டறிய முடியும். இந்த வழிமுறையின் மூலம் ஆய்வுக்கூடங்களின் தரத்திற்கு நிகராக புற்றுநோயின் பாதிப்பு குறித்த முடிவுகளை தெரிந்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

wsuportables

Related posts: