செவ்வாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..?

Tuesday, January 3rd, 2017

சூரியக்குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாகவும், நான்காவது கோளாகவும் செவ்வாய் கோள் காணப்படுகின்றது. இக்கோள் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவை கொண்டதுசெவ்வாய் கோளில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பல்வேறுப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.செவ்வாய் கிரகம் தொடர்பில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில், செவ்வாய் கோளை பற்றிய சில உண்மைகள் தெரிந்துகொள்வோம்.

பாறைக்கோளமான செவ்வாய்க்கு ரோமானிய போர் கடவுளின் பெயர் (மார்ஸ்) சூட்டப்பட்டுள்ளது.பூமியின் ஈர்ப்புவிசையில் 37 சதவிகிதம்தான் செவ்வாயில் இருப்பதால் பூமியில் எம்பிக் குதிப்பது போல் குதித்தால் 3 மடங்கு உயரத்தில் மிதப்பீர்கள்.செவ்வாயில் உள்ள உயரமான எரிமலைக்கு ஒலிம்பஸ் மோன்ஸ் என்று பெயர். 21 கி.மீ நீளம், 600 கி.மீ சுற்றளவில் இது பூமியின் எவரெஸ்ட் சிகரத்தையும் விட உயரமானது.செவ்வாய்க்கு போபோஸ், டெய்மோஸ் என 2 நிலவுகள் உண்டு.

கிரேக்க கடவுளான ஏரிஸ் பயணிக்கும் தேர்க்குதிரைகளின் பெயர்களே இந்த இரு நிலாக்களின் பெயர்களாகும்.செவ்வாய் கோளின் மண் சிவப்பாகத் தெரிய, அதில் அதிகமுள்ள இரும்பு ஆக்சைடே காரணம்.சூரியனிலிருந்து 4-வது கோளான செவ்வாயில், ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்களாகும்.பூமியைப்போலவே எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பருவநிலை மாறுதல்களும் செவ்வாயில் (4 பருவங்கள்) உண்டு.

jathagam2

Related posts: