செல்பி மோகத்தில் சந்தையிலும் ‘selfie fridge’ அறிமுகம்!

Saturday, October 21st, 2017

தொலைபேசி வைத்திருக்கும் பலரும், அதிகமாக இன்று பயன்படுத்தும் சொல் ‘செல்பி’ ஆகும்.

இதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், விரும்பிய வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியடைகின்றனர். இந்த வரிசையில் ‘selfie fridge’ (குளிர்சாதன பெட்டி) தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் இவ்வகை குளிர்சாதன பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாம், காய்கறி பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்க, கடைக்குச் சென்றால், என்ன பொருட்கள் தேவை என்பதை ஏற்கனவே பார்த்து, சிட்டையில், குறிப்பெடுத்துக்கொண்டு கடையில் சென்று அதைப்பார்த்து வாங்குவோம்.

ஆனால் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த செல்பி பிரிட்ஜால், நாம் எந்த குறிப்பையும் கடைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை. அதே போல எந்த பொருட்களையும் மறந்து விட்டோம் என கவலைப்பட தேவையுமில்லை.

எப்படியெனில் இந்த நவீன பிரிட்ஜில் என்ன பொருட்கள் இருக்கிறது, இல்லை என்பதை, அதுவே செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை நமது தொலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அதனை பார்த்து, அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை வாங்கலாம்.

இதற்காக அந்த குளிர்சாதனபெட்டிக்குள், 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு முறையும் நாம் குளிர்சாதன பெட்டியின் கதவை திறந்து பின் மூடும் போது, அது செல்பி எடுத்து அலைபேசிக்கு அனுப்பி விடுகிறது.அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் விற்பனையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: