கேகாலையில் போர்த்துக்கேயர் கால கட்டடம் கண்டுபிடிப்பு!
Friday, October 20th, 2017
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிற்ற தொகுதியில் பனாவல மடகம்மான என்ற இடத்தில் போத்துக்கேயர் காலப்பகுதியில் கட்டப்பட்ட கட்டட நிர்மாணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் உள்ள காட்டுபகுதியில் இது தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய தொல்பொருள் பணிப்பாளர் பி.மண்டவெல தெரிவித்தார்.
1515 – 1540ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட சீத்தாவக்கபுர காலப்பகுதியில் சப்ரகமுவ பிரதேசத்தை கண்காணிப்பதற்காக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது.
Related posts:
100 கி.மீ. வேகத்தில் காந்த சக்தியால் இயங்கும் அதிவேக ரயில்
மதுபானம், ஷாம்பு, அழகு சாதனப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும்!
டுவிட்டரின் புதிய விருந்தாக வெளியாகியுள்ள ஏ.ஆர் மொபைல் செயலி!
|
|
|


