காகிதத்தை மறு சுழற்சி செய்யும்  நவீன கருவி கண்டபிடிப்பு!

Monday, March 7th, 2016
காகிதத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் ஒரு இயந்திரத்தை ஜப்பான் நாட்டினர் கண்டறிந்துள்ளனர்.
இதுவரையில் குடிநீர் மற்றும் பிளாஸ்ட்டிக் பொருள்கள் போன்றவற்றை மட்டுமே மறு சுழற்சி செய்து பயன்படுத்திக் கொண்டு வந்த நிலையில் தற்போது காகிதத்தையும் மீழ்சுழற்சி செய்யும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதன் வழியே காகித குப்பைகளை மறுசுழற்சி செய்து சில நிமிடங்களில், பயன்படுத்தக் கூடிய வெள்ளைக் காகிதமாக பெறலாம். தேவையில்லாத காகிதங்களை அப்புறப்படுத்துவதால் ஒருவேளை மிக முக்கிய காகிதங்களையும் அளித்து விட்டால் என்ன செய்வது என்று வருந்த வேண்டாம்.
இதற்காகவே ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும் காகிதங்களில் உள்ள அனைத்து தகவல்களும் இந்த எந்திரத்தில் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. அதனால் நமக்கு வேண்டிய முக்கியமான தரவுகளை எந்நேரத்திலும் பெறலாம்.
சாதரணமாக காகித மறு சுழற்சி செய்யும் எந்திரத்தில் ஒரு காகிதத்தை உருவாக்க ஒரு குவளை தண்ணீரை ஊற்ற வேண்டியிருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த இயந்திரத்தில் தண்ணீரையே சேர்க்காமல் உலர் முறையை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது

Related posts: