உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்!
Tuesday, February 21st, 2017
இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு நிறுவனமும் அனுப்பியிராத அதிவேகம் கொண்ட ராக்கெட் ஒன்றினை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதேவேளை குறித்த ராக்கெட்டில் சில மனிதர்கள் அடங்கிய குழு ஒன்றினையும் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது.
முன்னதாக 2018ம் ஆண்டளவில் Exploration Mission 1 (EM–1) எனும் திட்டத்தின் ஊடாக மனிதர்கள் அற்ற விண்கலம் ஒன்றினை நிலவுக்கு நாசா நிறுவனம் அனுப்பவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டளவில் Space Launch System (SLS) எனும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இப் புதிய திட்டமானது செவ்வாய் கிரகத்தினை நோக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Exploration Mission 1 (EM–1) எனும் திட்டத்தின் ஊடாக பூமியிலிருந்து சுமார் 70,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருக்கும் நிலவினை 6 நாட்களில் சென்றடைய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts:
|
|
|


