உருவானது காற்றிலிருந்து குடிநீரை பிரித்தெடுக்கும் சாதனம்!

Wednesday, March 28th, 2018

உலகளவில் விஸ்வரூபம் எடுத்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக காற்றில் உள்ள நீராவியை பிரித்து எடுப்பது தொடர்பில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவ் ஆய்வின் விளைவாக தற்போது சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை MIT UC Berkeley இல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.எனினும் இது ஒரு மாதிரியாகவே உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை பாலைவனம் உட்பட பல்வேறு பிரதேசங்களில் பரிசோதனைக்கு உட்படத்தப்படவுள்ளது.

வளியின் ஈரப்பதன் 10 சதவீதம் காணப்பட்டால் கூட அதிலிருந்து நீரை பிரித்தெடுக்கக்கூடியதாக இருக்கும்.

இப் பரிசோதனைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் வியாபார நோக்கத்தினாலான சாதனம் உருவாக்கப்படும் என தெரிகின்றது.

Related posts: