O/L சித்தியடையாத மாணவர்களுக்கு A/L படிக்க சந்தர்ப்பம்!

Friday, August 25th, 2017

கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு, உயர்தர வகுப்புகளில் சேர்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்திலிருந்து உயர்தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கும் புதிய கொள்ளைகளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.தொழிற்கல்வி தொழிநுட்ப பிரிவுகள் 26, இவர்களுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 43 பாடசாலைகளுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி தொழிநுட்ப பிரிவுகளை கற்பிக்க, அது தொடர்புடைய பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ கொண்ட ஆசிரியர்களை பணிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சகல மாணவர்களுக்கும் 13 வருடங்கள் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts: