O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, December 28th, 2020

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

இதன்போது 11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது - அகிலன்
11 ஆயிரம் ரூபா மில்லியன் செலவில் AB39 வழுக்கையாறு புங்குடுதீவு குறிகாட்டுவான் வீதி இவ்வாண்டு புனரமைப...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்களுடன் நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்...