O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Monday, December 28th, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
இதன்போது 11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் புகைப்படம் வெளியானது!
விவசாயிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் விசேட செய்தி!
கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - உள்நாட்டலுவல்கள்...
|
|
|


