73 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கும் சவுதி அரேபியா!
Wednesday, October 25th, 2017வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக சவுதி அரேபியா 73 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கும் களுகங்கை அபிவிருத்தி ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் 73 மில்லியன் டொலர்களை நிவாரண அடிப்படையில் வழங்கியுள்ளது.இதற்கான இரண்டு உடன்படிக்கைகள் நிதி அமைச்சின் சார்பில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் அபிவிருத்திகான சவுதி நிதியத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் பௌஸி அல்ஷாட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்
Related posts:
பிரசவத்தின் போது தாயும், பிறந்த குழந்தையும் மரணம்!
பொது இடங்களில் பட்டாசுகள் கொளுத்துவது தவறு - யாழ். நீதிமன்றம் எச்சரிக்கை!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதானதல்ல - அமைச்சர்...
|
|