5 மாத காலப்­ப­கு­திக்குள்  42141 பேருக்கு டெங்கு!

Wednesday, May 10th, 2017

நாட­ளா­விய ரீதியில் கடந்த 5 மாத காலப்­ப­கு­திக்குள் 42141 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக  இனங்காணப்­பட்­டுள்­ள­துடன் இது­வ­ரையில் இந்­நோய்த்­தாக்­கத்­துக்­குள்­ளாகி 90 பேர் இறந்துள்ளதாகவும்  சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அதி­க­ள­வான டெங்கு நோயா­ளர்கள்  மேல் மாகா­ணத்­தி­லேயே  பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.இது தொடர்பில் சுகா­தார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்­கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் 42141 பேர்  டெங்கு நோயா­ளர்­க­ளாக கண்ட­றி­யப்­பட்­டுள்­ளனர். குறித்த நோயினால் பாதிக்­கப்­பட்ட  90 பேர்  இது­வ­ரையில்  இறந்­துள்­ளனர். அத­ன­டிப்­ப­டையில்  கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம்  9218 பேரும் கம்­பஹா மாவட்­டத்தில் 5485 பேரும் காலி மாவட்­டத்தில் 1856 பேரும் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

மேலும் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 2410 பேரும் திருக்­கோ­ண­ம­லையில் 4095 பேரும் கண்டறியப்பட்டுள்­ளனர். அத்­துடன் களுத்­து­றையில் 2471 பேரும் குரு­ணா­க­லையில் 1848 பேரும் டெங்கு நோயா­ளர்­க­ளாக இன ங்­கா­ணப்­பட்டு சிகிச்­சை ­பெற்­றுள்­ளனர்.

அத்துடன் மக்கள்  தொடர்ந்தும்  டெங்கு  நோய் குறித்து விழிப்­பு­ணர்­வுடன் செயற்படு மாறும் காய்ச்சல் காணப்பட்டால் உடனடி யாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் சுற்றுப்புறச்சூழலில் டெங்கு பரவும் காரணிகளை அகற்றி தூய் மையாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Related posts: