27 மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்து நாசம் – 5 கோடி நட்டம்!
Wednesday, June 26th, 2019ஹுங்கம, கலமெட்டிய பகுதியிலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 மீன்பிடி படகுகள் நேற்று இரவு முற்றாக தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தங்காலை நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
27 மீன்பிடி படகுகள் முற்றாக தீயில் எரிந்துள்ளமையால் சுமார் 500 இலட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
Related posts:
பாலங்கள் அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி!
கோட்டபாயவால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் - மஹிந்த ராஜபக்ஸ!
முப்படையினரையும் பாதுகாக்க ஜனாதிபதி பணிக்குழுவின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதியின் செ...
|
|