21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நாளை !
Thursday, June 2nd, 2022அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நாளை (03) கலந்துரையாடப்படவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 10.00 மணிக்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பளை செல்வபுரம் பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் 1613 மில்லியன் நட்டம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|