21 ஆம் திகதி தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!
Thursday, June 9th, 2016நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. அந்தவகையில் அன்றைய தினம் விவாதம் நடத்தப்பட்டு சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது நீண்டநாள் செயற்பாடாக இருந்தது. அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்
எமது அரசாங்கம் ஜனநாயக ரீதியில் பயணிக்கின்றது. தற்போது நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் நிதியமைச்சருக்கு எதிராகநம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியவில்லை. காரணம் கடந்த காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராக இருந்தார். எனவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியவில்லை என்றார்
Related posts:
|
|