21 ஆம் திகதி தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!

Thursday, June 9th, 2016

நாடாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டுள்ள தகவல் அறியும் சட்­ட­மூலம் மீதான விவாதம் எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெற்று நிறை­வேற்­றப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்சாளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கருணாதிலக்க தெரி­வித்துள்ளார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடிவுகளை அறி­விக்கும் செய்தியாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

தகவல் அறியும் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாதிக்கப்பட­வுள்­ளது. அந்­த­வ­கையில் அன்­றைய தினம் விவாதம் நடத்­தப்­பட்டு சட்டமூ­லத்தை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது நீண்­டநாள் செயற்­பா­டாக இருந்­தது. அதன்­படி எதிர்­வரும் 21 ஆம் திகதி இந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­படும்

எமது அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் பய­ணிக்­கின்­றது. தற்­போது நிதி­ய­மைச்­ச­ருக்கு எதிராக நம்­பிக்­கை­யில்லா பிரேரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் கடந்த காலத்தில் நிதி­ய­மைச்­ச­ருக்கு எதி­ரா­க­நம்­பிக்­கை­யில்லா பிரேரணை கொண்­டு­வர முடியவில்லை. காரணம் கடந்த காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராக இருந்தார். எனவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியவில்லை என்றார்

Related posts: