2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 21 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்!
Wednesday, November 11th, 20202021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 01.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் 18முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்பு நவம்பர் 23 ஆம் திகதிமுதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 21 நாட்களுக்கு விவாதிக்க நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒரு பகுதியினரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது - அரசாங்கம் !
உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது – யாழ் மாவட்ட மகளிர் வி...
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் பயணத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!
|
|