20 சீர்திருத்தம் குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு!

Wednesday, September 16th, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை பிரதமரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

9 பேர் அடங்கிய குறித்த குழுவுக்கு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: