13 ஆவது திருத்தம் குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டார். 13 ஆவது திருத்தம் குறித்து  பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைப்போம் என  ஆளும் கட்சி பிரதம கொறடவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் நேற்று (9) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில்  ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர  தனது கருத்தை முன்வைத்து உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலேயே இருக்கின்றோம்.

அவர் எப்போதும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கு அமைச்சரவைக்கு வந்து அமர்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தார்.

அதிகார பகிர்வு விவகாரத்தில் மொட்டு கட்சியில் பிளவு என்று குறிப்பிட்டாலும்  நாங்கள் அதிகார பகிர்வுக்காக கதைக்கின்றோம். 13 பிளஸ் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்‌ஷ கதைத்திருந்தார்.

இதில் மறைக்க எதுவும் கிடையாது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும் சர்வகட்சி கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைப்போம் மஹிந்த  ராஜபக்‌ஷவின் அனுமதியுடனேயே இதனை கூறுகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உணவகத்தின் முன் நிறுத்தும் வாகனங்களால் தவிர்க்க முடியாத விபத்துக்கள் - சாவகச்சேரி மருத்துவமனை பாதை ...
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் பிரிவினைவாத சக்திகளால் இலங்கைக்கு பேரபாயம் - பாத...