10 மணிநேர மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளிப்பு!
Wednesday, March 30th, 2022
இன்றையதினம், நாடளாவிய ரீதியில், சுழற்சி முறையில் 10 மணிநேரம் மின்துண்டிப்பை அமுலாக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வலய ரீதியாக, காலை 8 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, A B C D E F வரையான வலயங்களில், பிற்பகல் 2 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேரமும்,
G H I J K L வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில், 6 மணிநேரமும், மாலை 6 மணிமுதல், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், 4 மணிநேரமும்,
P Q R S வரையான வலயங்களில், பிற்பகல் 2 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில், 10 மணிநேரமும்,
T U V W வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில், 6 மணிநேரமும்,
மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும்,
M N O X Y Z வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், 4 மணிநேரமும் மின்தடை அமுலாதக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


