34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்!

Monday, September 23rd, 2019


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை இன்று(23) முன்னெடுத்துள்ளன.

அரச நிர்வாக அமைச்சினால் அரச நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் கொடுப்பனவினை அதிகரிகுமாறு முன்வைத்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிப்பினை வெளியிட்டு தொழிற்சங்கங்கள் சில இன்று(23) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச நிர்வாக அமைச்சின் நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் கொடுப்பனவுகளை வழங்க எடுத்துள்ள தீர்மானத்தினால் அனைத்து அரச சேவையினதும் சம்பள முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts: