விவசாயிகளின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் விவசாய முன்னேற்ற அமைப்பு!

Wednesday, November 6th, 2019


வலிகாமம் விவசாய முன்னேற்ற அமைப்பு சுட்டிக்காட்டு யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் வரவேற்று நன்றி தெரிவிப்பதாக வலிகாமம் விவசாய முன்னேற்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவிடயம் தொடர்பாக குறித்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இன்றைய தினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன்போது, யாழ்.மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் உரிய தீர்வுகளைப் பெற்று தந்திருந்தாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதேபோன்று விவசாயிகளாகிய நாம் தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உரிய தீர்வுகளை பெற்றுத்தரும் வகையிலேயே தங்களது உதவியை நாம் நாடியுள்ளோம். குறிப்பாக விவசாய உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு, உரமானியம், வங்கிகடன் ரத்து, இயற்கை அழிவுகளின் போதான நஷ்டஈடு, விவசாயிகளுக்கான வீடமைப்பு வசதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

அந்தவகையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்.மாவட்ட விவசாயிகளாகிய நாம் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளோம் என்றும் செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது குறித்த விவசாயிகளின் அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: