பாதுகாப்பு குறைப்பாடு: சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய!

Tuesday, October 15th, 2019


நாட்டின் பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக, சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருப்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இதற்கிடையில் நிக்கரவரட்டியவில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தமது ஆட்சியின் கீழ், தற்போது பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு, தான் முன்வைக்கும் பொருளாதார ரீதியான திட்டம் மற்றும் சமூக அபிவிருத்தி திட்டமானது எதிர்காலத்தை சிந்தித்து எடுக்கப்பட்டவையாகும் என அவர் குறிப்பிட்டார். சுதந்திரமான நாட்டை முன்னாள் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ செயற்பட்ட காலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தார்.

அதனை தற்போது இந்த அரசாங்கம் மீண்டும் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளார்கள் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

Related posts: