தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் – கோத்தாபய ராஜபக்ச!
Monday, August 12th, 2019வடக்கு மக்களின் அபிலாசைகள் ,விசேடமான எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக தமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளதாகவும், அவர்களின் பிரச்சனைகளையும் அபிலாசைகளையும் தமது அரசாங்கத்தில் உறுதியாக தீர்த்து வைப்பேன் எனவும் கோத்தாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், உரையாற்றும்போதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
அத்துடன் 2500 வருடங்கள் பழைமையாக வரலாற்றை கொண்ட எமது நாட்டில் பல இனத்தவர் வாழ்கிறார்கள் என்றும், எப்பொழுதும் நாம் ஒவ்வொருவரினது சமயத்திற்கு கொளரவமளித்து, ஒவ்வொருவரினது கலாச்சார விழுமியங்களிற்கு மதிப்பளித்து நட்புறவுடன் வாழ்ந்த இனமாகும் எனவும், எமது பலமாக அந்த ஒற்றுமை எப்பொழுதும் இருக்க வேண்டுமெனவும் கோத்தாபய ராஜபக்ச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார் .
Related posts:
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும நம்பிக்கை!
எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களால் பாதிப்புற்றோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - நுகர்வோர் பாது...
|
|