எரிவாயு பற்றாக்குறை நிலைமை சீராகும் – எரிவாயு நிறுவனங்கள்!
Thursday, October 31st, 2019சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை எதிர்வரும் சில தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில், குறித்த நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயு கிடைத்த வண்ணம் உள்ள நிலையில், எதிர்வரும் மூன்றரை மாதங்களுக்கு அவற்றை பராமரிக்க முடியும் எனவும் குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ள போதிலும், அநேக பிரதேசங்களில் சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிவாயு பற்றாக்குறை தற்காலிகமாக இடம்பெற்றதொன்று என சுட்டிக்காட்டிய குறித்த நிறுவனங்கள், சர்வதேச ரீதியில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன
Related posts:
பகிடிவதையின் கொடூரம் – யாழில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
இன்றுமுதல் கடவுச்சீட்டு கட்டணத்தில் மாற்றங்கள்!
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்து விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பு - வலுசக்த...
|
|