இலங்கை துறைமுகத்தில் வெளிநாட்டு கடற்படைக் கப்பல்!

பங்களாதேஷ் கடற்படை கப்பல் ஒன்று நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
‘சோமுத்ரா அவிஜான்’ என்றழைக்கப்படும் இக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
நல்லெண்ண அடிப்படையில் வருகைத்தந்த குறித்த கப்பலின் அதிகாரிகளுடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தின்போது, நாட்டிலுள்ள பிரபலமான இடங்களைப் பார்வையிடுவதற்கும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 141ஆவது இடம்!
தங்கம் கடத்திவந்த 3 பெண்கள் கைது!
காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான்: ஜனாதிபதி மைத்திரி!
|
|