வேம்படி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிப்பு!
Thursday, June 21st, 2018யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்திய துணை தூதுவர் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களிற்கு இங்கு விசேட யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியை இந்திய துணை தூதரகத்தின் யோகா ஆசிரியர் சூரியகுமார் வழங்கினார்.
இதில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி உப அதிபர் மேனகா கிருஸ்ணபிள்ளை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட இந்திய துணை தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் மாயம்!
அனர்த்தம் காரணமாக 146 பாடசாலைகள் பாதிப்பு!
கொரோனா : இலங்கையில் 4வது நபர் மரணம்!
|
|