வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்ட ஹயஸ் வான்: மூன்று இளைஞர்கள் படுகாயம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை(25) காலை- 07 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் படு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வான் சாரதி நித்திரைக் கலக்கத்துடன் வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்கான காரணமாக உள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
உருவாகின்றது கிளிநொச்சி நகரசபை - மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையா...
கடல்வழியாக தப்பி செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது!
|
|