வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் – சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு!

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்கு இலங்கை வான்போக்குவரத்து பிரிவு!
கொரோனா தொற்றில் எதிரொலி : யாழ்ப்பாணம் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை முடக்கம்!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க கடமைகளை ப...
|
|