வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!

வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும்வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தீவிரமடைந்தததைத் தொடர்ந்து, மே 21 முதல் 31 வரை வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு; சுகாதார அமைச்சு விசேட சுற்று நிருபம்!
வெலிக்கடை படுகொலை : ஒக்ரோபர் 14ம் திகதி விசாரணை !
மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி ரணில் ஆர...
|
|