வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!
Monday, March 11th, 2024வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன.
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த “மன்னா ரமேஷ்” தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டுபாய் அரசுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளிக்கு ஈ.பி.டி.பியின் இலண்டன் கிளை உறுப்பினர் நிதி உதவி!
ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு ...
யாழ்ப்பாணத்துடனான சேவையை விஸ்தரிக்க ஆர்வம் காட்டும் சர்வதேச விமான நிலையங்கள்!
|
|