விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு இன்றுமுதல் அனுமதி – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, December 29th, 2021

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 வீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றிரவு (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வ...
சீன இராணுவத்தின் சீருடை விவகாரம் - சீன தூதரகத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை!