விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் – சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில் –
“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எமக்கு நன்மை பயக்கவில்லை. மொட்டு கட்சியால்தான் சுதந்திரக் கட்சி பயன் அடைந்தது.
எம்முடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் 14 ஆசனங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு இல்லாவிட்டால் ஒருவர்கூட வெற்றிபெற்றிருக்க முடியாது.
சுதந்திரக் கட்சி தனக்கான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே, இருக்கமுடியாவிட்டால், உள்ளுக்குள் இருந்து விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்காது, வெளியேற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே தினக் பாதுகாப்பிற்கு 5000 பொலிஸார் கடமை!
ஆத்மாவை புனிதமாக்கும் மகாசிவராத்திரி!
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை நீக்கம் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன...
|
|