விபத்தில் சிக்கிய பாலகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

Thursday, March 8th, 2018

விபத்தில் சிக்கிய 2 லு வயதுப் பாலகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியளவில் புலோலி சாரையடிப் பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டது புத்தூரில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீதிக்கு அருகில் இருந்த மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது .

இதில் தாய் , தந்தையர்களிற்கு எவ்வித காயமும் இல்லாத நிலையில் அவர்களின் பிள்ளையான புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அருள்நேஸ்வரன் அனுசன் (வயது ௲ 2 லு) என்ற பாலகன் தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்ட நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அருகில் பாலகன் மூச்சு விடச் சிரமப்பட்டதையடுத்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட போது பாலகன் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்

Related posts: