விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு புதிய விளையாட்டுத் திட்டம்!

Wednesday, March 27th, 2019

மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் தேவைகள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான றுவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தப் பிள்ளைகளின் திறமைகளை முறையாகக் கண்டறிந்து, அவற்றை வெளிக்கொணரக்கூடிய திட்டமொன்றை வகுக்கப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் அபுதாபியில் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கான சர்வதேச விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திறமைகாட்டிய இலங்கை பிள்ளைகளைப் பாராட்டி கௌரவித்து, பணப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களா...
தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை - கல்வி அமைச்சு அ...